Tuesday, February 21, 2012

ருத்ரம் -நமகம்
&
சஷ்ப்யாய ச ப்பேன்யாய ச நம:
சிகத்யாய ச பிரவாஹ்யாய ச 
நம இரிண்யாய  ச ப்ரபத்யாய ச நம :
கிஹும்சிலாய ச க்ஷ்யனாய ச நம :
கபர்தினே ச புலஸ்தயே ச 
நமோ க்ஹோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச 
நமஸ்தல்ப்யாய ச  கேஹ்யாய ச 
நம : காத்யாய ச கஹ்வரேஷ்ட்யாய  ச
நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச 
நம : பாஹும்சவ்யாய  ச ரஜஸ்யாய  ச 
நம : சுஷ்க்யாய ச ஹரித்யாய ச 
நமோ லோப்யாய சோலப்யாய  ச 
நம :ஊர்வ்யாய  ச   சூர்ம்யாய  ச 
நம : பர்ண்யாய  ச பர்ணசத்யாய ச 
 
&
 
இளம்புல்லில் நதி நுரையில் 
 
மணற்திட்டில் நீரோட்டத்தில் 
 
களர்நில வாசியாய்  வழிப்போக்கராய்
 
சுக்கான் பூமியினராய் நல்லிட வாசியாய்
 
சடாமுடியினராய் காவலராய்
 
மாட்டுக்கொட்டடியினராய் இல்லத்தவராய் 
 
கட்டிலில் இருப்போராய் உப்பரிகைவாசியாய் 
 
காட்டுவாசியாய் குகைவாசியாய் 
 
மடுவில்  பனித்துளியில் '
 
தூசியில் புழுதியில் 
 
உலர்கட்டையில் பச்சைக் கட்டையில் 
 
கட்டாந்தரையில் புற்தரையில் 
 
விரிந்த நிலத்தில் ஆற்றில் 
 
பச்சிலைகளில் உலர்ந்த சருகுகளில்
 
உள்ள [ருத்ரரே ] உம்மை வணங்குகிறேன்
 
 
 
[தமிழில் ]
 
---சந்திர கலாதர்   
             

No comments:

Post a Comment